ஆலந்துார்:கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்தில், சிமென்ட் கலவை லாரி, இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், போக்குவரத்து உதவி ஆய்வாளர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
.தாம்பரம், சானடோரியம், துர்கா நகரைச் சேர்ந்தவர் நடராஜ், 56; மவுன்ட் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர். இவர், நேற்று காலை, 10:30 மணிக்கு, பணி முடித்து, நந்தம்பாக்கத்தில் இருந்து வீட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.கத்திப்பாரா மேம்பாலத்தில் ஏறியபோது, சிமென்ட் கலவை லாரி, நடராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில், துாக்கி வீசப்பட்ட நடராஜின் தலையில் இருந்து, தலைக்கவசம் கழன்றது.கண் இமைக்கும் நேரத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நடராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்தை ஏற்படுத்திய, லாரி டிரைவர், கும்ப கோணத்தைச் சேர்ந்த சதீஷ், 37, என்பவரை, மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE