சிந்தாதிரிப்பேட்டை:மளிகை கடைக்காரரை, பணம் கேட்டு மிரட்டிய, போலி வணிக வரித் துறை அதிகாரியை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, பழைய பங்களா தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 40; அதே பகுதி யில், மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் கடைக்கு, நேற்று முன்தினம் இரவு வந்த மர்ம நபர் ஒருவர், தன்னை வணிக வரித் துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி, 'வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களுக்கு, ஏன் ரசீது தராமல், வரி ஏய்ப்பு செய்கிறீர்?' என, சிவலிங்கத்திடம் கேட்டுள்ளார்.கடைக்கு, 'சீல்' வைக்காமல் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டுமென, அவரை மிரட்டியுள்ளார். சுதாரித்த சிவலிங்கம், சிந்தாதிரிப் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்று மதியம், போலி வணிக வரித் துறை அதிகாரியாக நடித்த, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பழனிவேல், 48, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE