பெருந்துறை: பெருந்துறை அருகே, கள்ளக் காதலியுடன் கணவர் மாயமாகி விட்டதாக, மனைவி புகார் அளித்தார். பெருந்துறையை அடுத்த, வேப்பம்பாளையம் தெற்கு காலனியை சேர்ந்தவர் தேவராஜ், 32; இவரின் மனைவி கிருஷ்ணவேணி, 22; இரண்டு ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதியருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், கணவனைக் காணவில்லை என, பெருந்துறை போலீசில், கிருஷ்ணவேணி நேற்று புகாரளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வேப்பம்பாளையம் பகுதியில், இரண்டாண்டாக கணவரோடு வசிக்கிறேன். ஒரு வாரத்துக்கு முன், தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்ற, கணவர் தேவராஜ் வீடு திரும்பவில்லை. கார்த்தி என்பவரின் மனைவி தமிழரசியுடன், கணவருக்கு கள்ளக்காதல் இருப்பதாக தெரிய வருகிறது. தற்போது அவரையும் காணவில்லை. மாயமான கணவரை கண்டுபிடித்து தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதன்படி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான தேவராஜை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE