மொடக்குறிச்சி:'மூலிகை தாய்' என்றழைக்கப்படும் சாமியாத்தாள் என்பவருக்கு, ஜெர்மனி நாட்டின் சர்வதேச அமைதி பல்கலைக்கழகம், 'வைத்ய பூஷன் விருது' வழங்கி கவுரவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள், 66. இவர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக, மூலிகை செடிகள் சேகரிப்பில், ஈடுபட்டு வருகிறார். ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ளார். 2004ல் இவரது கணவர் இறந்தார். இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இவர், சாவடிபாளையம் கிராமத்தில், தனியாக வசித்து வருகிறார்.
சாமியாத்தாளுக்கு மூலிகைகளை தேடி, சித்த மருத்துவர்களுக்கு வழங்குவது தான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. இவரது மூலிகை சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வை பாராட்டி, 2012ல், ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், 'மூலிகை தாய்' என்ற பட்டத்தை வழங்கினார்.
இயற்கை மருத்துவம் சார்ந்த மாநாடு, கால்நடை மருத்துவ முகாம், கட்சி விழாக்களில், குடில்கள் அமைத்து, மூலிகை செடிகளை வழங்கி வருவதுடன், பல நோய்களுக்கும் தீர்வு கண்டு
வருகிறார்.
பழநி சித்த மருத்துவ சங்கம் சார்பில், சாமியாத்தாளுக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த, சர்வதேச அமைதி பல்கலை நிர்வாகிகள் மற்றும் சித்த வைத்திய மருத்துவர்கள், சாமியாத்தாளுக்கு, 'வைத்ய பூஷன் விருது' வழங்கி, கவுரவித்தனர்.
இவரை தொடர்பு கொள்ள: 99659 - 69558.