புதுடில்லி: காஷ்மீரில், இந்திய ராணுவக் குழுவுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரோந்து பணிக்கு செல்கிறார்.

தோனி ரோந்து :
வரும் ஜூலை 31 முதல், இந்திய சுதந்திர தினமான ஆக.15 வரையில் இந்த ரோந்துப் பணியில் தோனி ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுதந்திர தினத்தை அவர் இந்த முறை ராணுவத்தினருடனே கொண்டாட உள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து தோனி, எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன.இதையடுத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், தோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது.
எம்எஸ் தோனி :
இந்நிலையில் தோனி, தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

பாராசூட் ரெஜிமென்ட் :
தோனி, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார். இந்நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் தோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE