பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நின்ற கோலத்தில்
அருள்பாலிக்கும் அத்தி வரதர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 31 நாட்கள் சயன கோலத்தில் அருள்பாலித்து வந்த அத்தி வரதர், நேற்றிலிருந்து நின்ற கோலத்தில், அருள்பாலிக்கிறார். பக்தர்கள் வசதிக்காக, கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நின்ற கோலம்,அருள்பாலிக்கும்,அத்தி வரதர்


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், சயன கோலத்தில், 24 நாட்களும், நின்ற கோலத்தில், 24 நாட்களும் அத்தி வரதர் அருள் பாலிப்பார் என, அறநிலையத் துறை முன்பு தெரிவித்திருந்தது. ஆனால், பல காரணங்களால், 31 நாட்கள், சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர், நேற்று முதல் நின்ற கோலத்தில் உள்ளார். நேற்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாத பாடல்கள் ஒலிக்க சிறப்பு பூஜைகளுடன் நின்ற கோல தரிசனம் துவங்கியது.

நின்ற கோல அத்தி வரதரை தரிசிக்க அதிகாலை, 2:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிழக்கு கோபுரம் வெளியே குவிந்தனர். முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தை வைத்திருப்போருக்கு, தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த வசதிகளைவிட, கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

விடுமுறை நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், அவர்களை காத்திருக்க செய்து, வரிசையாக அனுப்ப, அண்ணா அவென்யூ மற்றும் வாழைத்தோப்பு என, இரு இடங்களில், தலா, 10 ஆயிரம் பேர் காத்திருக்கும் வகையில், பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


அதிகாலை 2:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம்:


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், சயன கோலத்தில், 24 நாட்களும், நின்ற கோலத்தில், 24 நாட்களும் அத்தி வரதர் அருள் பாலிப்பார் என, அறநிலையத் துறை முன்பு தெரிவித்தது. ஆனால், பல காரணங்களால், 31 நாட்கள், சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர், நேற்று முதல் நின்ற கோலத்தில்

உள்ளார். நேற்று காலை, 5:00 மணிக்கு, சுப்ரபாத பாடல்கள் ஒலிக்க, சிறப்பு பூஜைகளுடன் நின்ற கோல தரிசனம் துவங்கியது. நின்ற கோல அத்தி வரதரை தரிசிக்க, அதிகாலை, 2:00 மணி முதலே, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிழக்கு கோபுரம் வெளியே குவிந்தனர்.


பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதல்:


முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தை வைத்திருப்போருக்கு, தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த வசதிகளைவிட, கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், அவர்களை காத்திருக்க செய்து, வரிசையாக அனுப்ப, அண்ணா அவென்யூ மற்றும் வாழைத்தோப்பு என, இரு இடங்களில், தலா, 10 ஆயிரம் பேர் காத்திருக்கும் வகையில், பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


7,500 போலீசார் குவிப்பு:


நிருபர்களிடம், கலெக்டர், பொன்னையா கூறியதாவது: நேற்று மட்டும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், அத்தி வரதரை தரிசித்திருப்பர். பக்தர்கள் பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில், 5,000 பேர் உள்ளனர். கூடுதலாக, 2,500 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம், 7,500 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

கூடுதல் கட்டணமா புகார் அளியுங்கள்!

அத்தி வரதரை தரிசிக்க வரும் வெளியூர் பக்தர்களிடம், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டண கொள்ளையில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரையடுத்து, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர். இதில், அதிக கட்டணம் வசூல் செய்த, மூன்று டாடா மேஜிக், நான்கு ஷேர் ஆட்டோக்கள், 102 ஆட்டோ ரிக்ஷா என, மொத்தம், 109 வாகனங்கள், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர், செந்தில்குமார் கூறியதாவது: அதிக கட்டணம் வசூல் செய்யும் வாகனத்தின் எண்ணை குறிப்பிட்டு புகார் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். இதற்காக, 044 - 2726 1277 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

1 லட்சம் பேருக்கு அன்னதானம்:

அறநிலையத் துறை அன்னதானம் வழங்க, முதல்வர், 1 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தார். இந்நிலையில், அன்னதான திட்டத்தை, காஞ்சிபும் செட்டி தெருவில், அறநிலையத் துறை செயலர், பணீந்திர ரெட்டி, நேற்று மாலை துவக்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: அத்தி வரதர் நன்கொடை திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் வரை பலரும் செலுத்தியுள்ளனர். அறநிலையத் துறை சார்பில், நாள்தோறும், 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவுள்ளோம். அறநிலையத் துறை மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், தினமும், ஒரு லட்சம் பேருக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நடமாடும் ஏ.டி.எம்.,

பக்தர்களின் வசதிக்காக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின், நடமாடும் ஏ.டி.எம்., மையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும், ஏ.டி.எம்., மையம், வரதராஜ பெருமாள் கோவில் அருகில், ரங்கசாமி குளம் பஸ் நிறுத்தத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, ஏ.டி.எம்., மையம் செயல்படும். காஞ்சிபுரம், கலெக்டர் அனுமதி உடன், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், தங்களின் பண தேவைகளை, இதன் வாயிலாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.


அதிநவீன தீயணைப்பு வாகனம் வருகை

பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக, மாவட்ட நிர்வாகம், பல ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில், பெரிய கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்து மற்றும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு அதி நவீன மீட்பு வாகனம், சென்னையில் பயன்பாட்டில் உள்ளது. அந்த வாகனம், அத்தி வரதர் வைபத்திற்காக, நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரம் வந்தது. இந்த வாகன மூலம், 54 மீட்டர் உயரமுள்ள பல மாடி கட்டடங்களில் தீ ஏற்பட்டால், அவற்றை அணைக்க முடியும். அங்கு சிக்கியுள்ளோரை விரைவில் மீட்க முடியும். இந்த வாகனம், காந்தி சாலை தேரடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


நடவடிக்கை தொடருமா?

வி.ஐ.பி., நுழைவாயிலில், 'பாஸ்' உள்ளவர்களை மட்டுமே, போலீசார் நேற்று அனுமதித்தனர். அதனால், எந்த பிரச்னையும் இல்லாமல், பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. இதேபோல், வைபவ இறுதி நாளான, ஆக., 17ம் தேதி வரை, போலீசார் பின்பற்ற வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மா சு ச: என்றால் என்ன?

தரிசனத்தில், அத்தி வரதரின் வலது கையில் பொறிக்கப்பட்டுள்ள, 'மா சு ச:' என, மூன்று எழுத்துகளை பார்த்த பக்தர்கள், அதன் அர்த்தம் புரியாமல் குழம்பினர். மா சு ச: எழுத்துகள் குறித்து, கோவில் செயல் அலுவலர், தியாகராஜனிடம் கேட்டபோது, ''என்னை சரணடை; உனக்கு மோட்சம் தருவேன் என, பொருள் தரும். இந்த எழுத்துகள், கீதை உபதேசத்தில் உள்ளன,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
02-ஆக-201917:03:51 IST Report Abuse

தமிழர்நீதி 500ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர்கள் யாகம் செய்யும் போது யாகத்தீயில் பட்டு மரத்தினால் செய்யப்பட்ட அத்திவரதர் சிலை சிதிலமடைந்து விட்டதாக சொல்கிறார்கள். ‌‌ சிதிலமடைந்து சிலை வழிபடுவதற்கு உகந்தது அல்ல என்று முடிவு செய்தார்கள். தேவையற்ற அந்த சிலையை என்ன செய்வது ? அதுதான் பிரச்சினை கொளுத்தி விடலாம். அல்லது புதைத்து விடலாம்.இரண்டுமே சரியல்ல. கோயில் அறையில் வைத்து பூட்டி விடலாம். ஆனால் பக்தர்களுக்கு தெரிந்தால் அறைக்கு வெளியில் இருந்து வணங்க ஆரம்பித்து விடுவார்கள். அது தோஷம் பிறகு ? திருமணத்தில் மணமகன் மணமகள் பயன்படுத்திய பிறகு தேவையற்ற அந்த மாலையை வீதியில் போடமாட்டார்கள். ஏன் ? கண்டவர் காலில் மிதிபடும் எச்சில் படும் நாய் சிறுநீர் கழிக்கும். அதனால் அந்த மாலையை வீட்டுக் கிணற்றிலோ வீட்டுக் கூரையின் மீதோ போட்டுவிடுவார்கள். அந்த மாலையை மீண்டும் யார் கழுத்திலும் போடமாட்டார்கள். அதுபோல.... தேவையற்ற அத்திவரதர் சிலையை கோயில் குளத்தில் வைத்துவிடலாம்..... என்று 500ஆண்டுகளுக்கு முன் இருந்த கடவுள் நம்பிக்கையாளர்கள் கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி தான் அத்திவரதரை குளத்தில் வைத்து விட்டார்கள்.‌ அப்படிப்பட்ட சிலையை மீண்டும் கோயிலுக்குள் கொண்டு வந்து வைப்பது, வழிபடுவது எல்லாம் 500 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் நிர்வாகிகள் எடுத்த முடிவுக்கு எதிரான செயல் ஆகும். ஏ.....மா.....றா.....தே.....‌ ஏமாறாதே.... ஏமாற்றாதே, ஏமாற்றாதே பொய் சொல்லி வாழும் பொறுப்பற்றவர்களுக்குப் பதிலா? நேரக் கேடு 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்ற தொல்காப்பிய வரிகளைச் சுட்டிக்காட்டி தமிழருக்குத் திருமணம் என்னும் ஏற்பாடு பின்னாலே பொய்ச் சொன்ன சமூகத்தில் ஏற்பட்ட ஒன்று என்று கூறி அடுக்கடுக்கான வாதங்களைக் கூறுவார் தந்தை பெரியார் அவர்கள் (அதுபற்றி தனியே விரிவாகக்கூட எழுதுவோம் பின்னர்) பொய் பேசுதல் என்பதற்குள்ள காலம் வெகு நீண்ட வரலாறு உடையது. தொல்காப்பியர் காலத்திலும் சரி, வள்ளுவர் காலத்திலும் சரி, பொய்ப் பேசுதல் என்ற பழக்கம் அப்போதே இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது "பொய்யுடை ஒருவன் சொல் மெய்போலும்மே மெய்போலும்மே"  - என்ற தமிழ் இலக்கியப்  பாடல்  ஒரு பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால், எளிதில் எதையும்  நம்பாதவர்களைக்கூட அது நம்ப வைக்கும் தன்மையுடையது இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி நாட்டு நாஜிக் கட்சியில் 'கொயபெல்ஸ்' என்று ஒரு யுத்தப் பிரச்சார மந்திரி இருந்தான் அவனது வேலையே - ஹிட்லர் ஆலோசனைப் படி பொய்யை திரும்பத் திரும்பக் கூறி - அதை முதலில் நம்ப மறுப்பவர்களைக்கூட பிறகு நம்ப வைக்கும் அளவுக்கு அந்தப் பிரச்சார அலை இழுத்துச் சென்றுவிடும். புராண காலங்கள் பொய்யில் தோன்றியவை தான் புராணங்களை ஆங்கிலத்தில் Mythology என்று அழைப்பர். 'Myth' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் "புரட்டு" என்றே பொருள் சிறுகதைகள் - தொடர் கதைகள் புனையும் போது எழுத்தாளர்கள் இருக்கும் ஊர்களையும், வரலாற்றுப் பெயர் பெற்ற இடங்களையும் இணைத்து கற்பனையாக எழுதினார்கள். பிற்காலத்தில் அதற்கு 'தெய்வீகம்' - புனிதம் என்ற மெழுகு - 'கில்ட்' பூசப்பட்டு உண்மையை விட அதிக வெளிச்சத்துடன் அது வீசிக் கொண்டே இருக்கும் உண்மையை நிரூபிப்பது அவ்வளவு எளிதல்ல ஆனால் பொய் அழகான ஜோடனை, ஒப்பனை கொண்டதால் எளிதில் எவரையும் வசீகரிக்கச் செய்யும். நம்பச் செய்யும். இறுதியில் அது உடைந்து நொறுங்குவது உறுதி என்றாலும் - பரவிய வரை லாபம் என்பதே பொய்யைப் பரப்பும் புல்லர்களின் நோக்கம் தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறியது 1925-இல் - இன்று 94 ஆண்டுகள் ஆகின்றன என்றாலும் இன்று வரை பெரியார் காங்கிரசிலிருந்து பணத்தைத் திருடிக் கொண்டு வெளியேறி விட்டார் என்ற ஈனப்பொய்ப் பிரச்சாரம் தொடர்கிறதா? இல்லையா? (அதற்குப் பதிலடி அப்பொழுதே கொடுத்தவர் தந்தை பெரியார்) "பெரியார் பிள்ளையாரை உடைத்தாலும் பெரியார் வீட்டில் அவர் ரகசியமாகப் பிள்ளையார் பூஜை செய்து வந்தார்" என்ற பொய்ப் பிரச்சாரப் புழுதியைக் கிளப்பி விட்டு, வரலாறு தெரியாத இளசுகளுக்கு ஒரு தவறான நம்பிக்கையை ஏற்படுத்த சிலர் முயலுகிறார்களா இல்லையா? "வீரமணி மனைவி கழுத்தில் தாலி கட்டியிருக்கிறார்" என்று ஒரு அற்ப பிரச்சாரத்தை இன்று பல கூமுட்டைகளும், அயோக்கிய சிகாமணிகளும் செய்கிறார்களா இல்லையா? இதற்கெல்லாம் மறுப்பு மறுப்பு என்று தெரிவித்துக் கொண்டே இருந்தால், திட்டமிட்டு பொய் பேசும் இந்த ஈனப் பிறவிகள், "துரவு பதையின் மைந்தர்களுக்கு - இதைத் தவிர வேறு வேலை கிடையாது நமக்கோ பல முக்கிய பணிகள் - ஆக்கப் பணிகள்  - அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டு விடுமே நம்மைத் தவிர நம்முடைய தனித்த தன்மையினால் பிறர் அஞ்சும் - நாம் அஞ்சாப் பெரும் பணியைச் செய்ய வேறு யாரும் இல்லை என்பதால் நாம் பதில் கூற வேண்டி, இதற்கு பதில் கூறினால் இன்னொரு பொய் மூட்டையை அவிழ்ப்பார் அதைக் கேட்டு நம்பும் பலவீனமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பரிதாபத்திற்குரிய வர்களே பொருட்படுத்தாதீர், அலட்சியப்படுத்தப் பழகுங்கள். புத்தரைப் பார்த்து ஒரு பெண் பல கொச்சை வார்த்தைகளால் வசை மாரி பொழிந்தாள். புத்தர் சிரித்து கொண்டே இருந்தார். சிறிது நேரம் கழித்து அப்பெண் கேட்டாள் "ஏய்யா நான் இவ்வளவு பேச்சு பேசினேன், நீங்கள் ஒன்றும் கூறாமல் கோபப்படாமல் இருக்கிறீர்களே" என்று, அதற்குப் புத்தர் அளித்த பதில் என்ன தெரியுமா? 'சகோதரியே, நீ எனக்குப் பிச்சைப் போட வருகிறாய்  நான் அதை ஏற்காவிட்டால் அது யாரிடம் இருக்கும்? 'யாரைச் சேரும்?' அது போலத்தான் நீ என்மீது கொட்டிய பழியும், புளுகும், அபாண்டமும். நான் அதை எடுத்துக் கொள்ளவில்லை, பொருட்படுத்தவில்லை. அது யாரைச் சேரும், உன்னைத்தானே" - அதுபோல இன்றைய அரசியல் புளுகர்களும். காரில் நாம் வேகமாகப் போகும்போது சில நாய்கள் வேகமாக நம்மீது பாய்வது போல் குரைத்துக் கொண்டே ஓடி வரும். பிறகுதானே சோர்ந்து நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இரைக்க இரைக்க அப்படியே நின்று சோர்ந்து வீழ்ந்து விடும் புளுகிணிகள், புரட்டுக்குப் பிறந்த குக்கல்களின் நிலையும் குவலயத்தில் அதேதான் நம் வேலையை நாம் பார்ப்போம். தன்மீது மலம் வீசியபோதுகூட அதனைத் துடைத்தெறி யாமல் சால்வைபோட்டு மூடிக் கொண்டே தனது இடியோசைப் பேச்சை இடையறாது தொடர்ந்த துணிவின், இமயத் தலைவர் பெரியாரின் வாரிசுகள் - தூசிகளுக்கும், குப்பைகளுக்கும் பதில் சொல்லி வீணே நேரத்தைப் பாழ்படுத்துவது - நிச்சயமாக இல்லை விடுதலை, 23.07.2019. சுடுகாட்டுக்கு போன பினம் மீண்டும் வீட்டிற்கு வரக்கூடாது என்பார்கள். அதுபோல வழிபாடு செய்ய உகந்தது அல்ல என்றுதான் அத்திவரதரை கோயில் குளத்தில் போட்டு விட்டனர். வேறு ஒரு சிலை செய்து கோயிலில் வைத்து விட்டார்கள். குளத்தில் போட்டு விட்ட சிலையை மீண்டும் கொண்டு வந்தது தவறு. மக்களை ஏமாற்ற பார்பன அர்ச்சகர்கள் செய்யும் மோசடி இது. கடவுளை மற மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்னார். பெரியார் வழியில் 💯 க்கு 💯 செல்பவர் தான் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள். கடவுள் உண்டு என்பவன் எவ்வளவு கீழ்த்தரமான பொய் மூட்டைகளை அவிழ்ப்பான் என்பலற்கு இது ஒரு உதாரணம். கடவுள் இல்லை என்பவர்கள் இப்படி பொய் சொல்ல மாட்டார்கள். அதனால் தான் பெரியார் சொன்னார் கடவுளை பறப்புகிறவன் அயோக்கியன் என்று. அத்திவரதர் மரக்கட்டை என்பது ஏமாத்தரவனுக்கும் தெரியும். ஏமாறுகிறவனுக்கும் தெரியும். பக்தி வந்தால் புத்தி போகும் புத்தி வந்தால் பக்தி போகும். கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பினவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. தந்தை பெரியார் வாழ்க. கலைஞரே தனது மரணம் பற்றி ஒருமுறை கூறியது " மரணம் ஒருநாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன் . ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியாலும் மத வெறியாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன் . ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு , அண்ணாவின் கொள்கைப் பாதுகாவலன் . நீங்கள் ஒருமுறை இறப்பிற்காக பயப்படுபவர்கள் . ஆனால் நானோ அதிக முறை கொல்லப்பட்டவன் . சூழ்ச்சிகளாலும் நயவஞ்சகத்தாலும் என் உடல் மட்டுமே மரணத்தை காணவில்லை , ஆனால் எனது உயிர் பலமுறை மரணித்து உயர்ப்பித்துள்ளது - எனக்கு மலர் வளையம் வைக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் பலருக்கும் நான் இரங்கற்பா எழுதிய போது அதை எனக்கும் உரியதாகவே நினைத்து எழுதியவன் . அஞ்சிடேன் நான் மரணத்தை கண்டு அந்த மரணத்திடம் போய் சொல் என்னை கண்டு அஞ்ச வேண்டாம் என்று ஏனென்றால் நான் அந்த மரணத்தையே வென்றவன் 😪 திராவிட_பேரரசன் 👑 கலைஞர் 🖋🕶💺 கலைஞரிஸ்ட் - kalaignarist

Rate this:
IYER AMBI - mumbai,இந்தியா
03-ஆக-201920:07:47 IST Report Abuse

IYER AMBIஉங்களுக்காகவே திருவள்ளுவர் ஒரு குறள் சொல்லியிருக்கிறார். உலகத்தார் உண்டென்பதிலென்பான் வையத்துள் அலகையஆய் வைக்கப்படும். ...

Rate this:
Krish - Chennai ,இந்தியா
02-ஆக-201908:19:32 IST Report Abuse

Krish மா சு ச ஹ என்பது சோகப்படாதே, கவலை படாதே என்று இன்றைய உலகத்திற்கு தேவையான ஒன்று. நம்மால் மாற்ற முடியாத ஒன்றை பற்றி நாம் ஏன் சோக பட வேண்டும். குடும்பம் வேலை சமூகம் மார்க்கெட் என்று எது நடந்தாலும், அது நன்மைக்கே என்று சோக படாமல் இருக்க சொன்ன Kannan நமது சிறந்த நண்பன்..

Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-ஆக-201907:08:39 IST Report Abuse

skv srinivasankrishnaveniஎன்னய்யா விட்டால் ராமியானம் எழுதின்னே போரீக . துளக்கமன்னர்கள் படையெடுத்தானுக பெரிய வியாபாரம் ன்னுசொல்லின்னுவந்து நம்மளே அடிமையாக்கி நாசம் செய்தவன் கிறிஸ்துவின் என்று ஆங்கிலேயன் அவன் சாமிகும்பிடவே சர்ச்சுவந்தன மதபோதகன வந்துட்டு நம்மவர்களையே இந்த மதமக்குமாத்தினானுக்க் இவாளிடமிருந்து பெருமாளை காக்கவே குலத்துளே வச்சாங்க கோவாளே ஒரு சர்ச்சுல்லே ஒரு மதபோதகர் பிணத்தையே வச்சு புத்தம்பண்ணி கிளாஸ் பொட்டிலே வச்சு ஷோ பண்ணுறானுகளே எல்லாம் மூடநம்பிக்கையேதான் , அடுத்த நாற்பதுவருசம் நிஸ்ச்சயம் இருக்கமாட்டோம்னு நம்பிக்கையே தான் சேவிக்கவாறாங்க நீர் சொன்னது வெறும் கேனத்தனம் ...

Rate this:
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-201902:17:15 IST Report Abuse

R.PERUMALRAJAமுதலில் , கோவிலுக்குள் முதியோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு கழிப்பிடம் ஏற்பாடு செய்வது , மற்றும் அதிவரதரை காண நெருங்கும் தருவாயில் உள்ள இடங்களில் விசிறி மட்டை கொண்டு இருவர் விசிறிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நவநாகரீக காலத்தில் மின்விசிறியிருக்கு பதில் விசிறி மட்டை கொண்டு விசிறிக்கொண்டு இருக்கின்றனர் , இதனால் மூச்சு திணறி பலர் ஸ்ட்ரெச்சர் இல் தூக்கி கொண்டு செல்கின்றனர் . ஒரு பெடெஸ்டல் FAN வாங்கி விசிறினால் யார் வீட்டு குடி மூழ்கி போகும் என்று தெரியவில்லை ....அதிவரதர் தூங்கும் வரை நாமும் தூங்கலாம் என்று அறநிலையத்துறை நினைத்ததோ என்னமோ ...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X