புதுடில்லி : காஷ்மீரில் போர் சூழல் ஏற்பட்டுள்ளதாக ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் இடஒதுக்கீட்டு திருத்த மசோதாவை ராஜ்யசபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். அவர் பேச எழுந்த போது, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமித்ஷாவை பேச விடாமல் எதிர்க்கட்சிககள் கூச்சலிட்டன.அப்போது எழுந்து பேசிய காங்.,ன் குலாம் நபி ஆசாத், காஷ்மீர் முழுவதும் போர் சூழல் ஏற்பட்டுள்ளது. பதற்றமாக உள்ளது. முன்னாள் முதல்வர் 3 பேர் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்க வேண்டும்.

இது தொடர்பாக பேச ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர பல நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கையில் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் காஷ்மீர் இடஒதுக்கீட்டு மசோதா அறிமுகம் செய்வது சரியானது அல்ல என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE