மதுரை : மதுரை மாநகராட்சியில் பெத்தானியாபுரம், வ.உசி., தெருப்பகுதியை உள்ளடக்கிய 21வது வார்டு, திடக்கழிவு மேலாண்மை திட்ட மாடல் வார்டாக அறிவிக்கப்பட்டது. அங்கு இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகிறது. படிப்படியாக பிற வார்டுகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை எடுத்துச்செல்ல 100 வார்டுகளுக்கும் 5.5 கோடி ரூபாயில் 99 இலகுரக வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கமிஷனர் விசாகன் தலைமையில் நடந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லுார் ராஜு அவ்வாகனங்களின் செயல்பாட்டை துவங்கி வைத்தார். இவை 21வது வார்டில் பயன்படுத்தப்படுகின்றன.
விரைவில் அனைத்து வாகனங்களும் வர உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர பொறியாளர் அரசு, நகர் நல அலுவலர் வினோத் ராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE