புதுடில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி தேடி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டில்லியில் சிதம்பரம் வீட்டுச் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று அவரை கைது செய்தனர்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் சிதம்பரம் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். தொடர்ந்து சிதம்பரம் வீட்டில் லுக்அவுட் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில்சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். பின் பக்க வாசல் வழியாகவும் உள்ளே நுழைந்து கைது செய்து காரில் அழைத்து சென்றனர்.

சிதம்பரம் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருதுறை அதிகாரிகளும் காத்திருக்கின்றனர். சட்டம், ஒழுங்கு பிரச்னை எழும் என்பதால் டில்லி போலீசாரும் சிதம்பரம் வீடு முன் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை ஆஜர்
சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறுகையில், சிதம்பரத்தை கைது செய்து ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இதனிடையே சி.பி.ஐ. அதிகாரிகளை கண்டித்து காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
