சென்னை : தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் கோவைக்கு சென்றிருக்கலாம் என்று வந்த தகவலை அடுத்து அங்கு பலத்த சோதனை நடந்து வருகிறது.

லக்ஷர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டு இருப்பதாகவும் தமிழக போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள். கடல் வழியாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளனர். அதனால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டிஜிபி உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.,22) இரவு முதல் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக வந்த தகவல் காரணமாக விமான நிலையம், பஸ் ஸ்டாண்ட்,ரயில் நிலையங்களில் மோப்ப நாய்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நாச வேலைகளில் ஈடுபட பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் கோவை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE