சென்னை: தமிழக போலீஸ் துறையில் 2ம் நிலை காவலர்கள்(ஆண், பெண்), 2ம் நிலை சிறைக்காவலர்கள்(ஆண், பெண், இரண்டாம் பாலினத்தவர்கள்) மற்றும் தீயணைப்பாளர்கள்(ஆண்கள்) பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு துவங்கிய தேர்வு 11.20 மணிக்குநிறைவு பெற்றது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்து உடல் தகுதி தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். காலியாக உள்ள 8826 காலி பணியிடங்களுக்கு, 228 மையங்களில் நடக்கும் இந்த தேர்வில் 3.22 லட்சம் பேர் பங்கேற்றனர். சென்னையில் மட்டும் 13 மையங்களில் தேர்வு நடந்தது.
ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது
அரியலூர் மாவட்டம் தத்தனூரில் நடந்த போலீஸ் தேர்வில், தேவபிரகாஷ் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுதிய ரகுபதி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE