புதுடில்லி: நாட்டில் பொருளாதார மந்தம் குறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல் மத்திய அரசு மீது சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில்;

" தங்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார சீரழிவை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் நிதி அமைச்சரும், பிரதமரும் திணறுகின்றனர். ரிசர்வ் வங்கியில் இருந்து திருடுவது எந்த பலனும் தராது. மருந்தகத்தில் இருந்து பேண்ட்எய்டை திருடி துப்பாக்கிச்சூட்டு காயத்திற்கு போடுவது போல் உள்ளது. " இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பொருளாதார சூழல் தொடர்பாக அளித்த பேட்டியில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டு இருப்பதாக கூறியிருந்தார். மேலும் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கலாம் என்ற சூழலும் உருவாகி உள்ளது. இந்நிலையில் ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE