சென்னை: சம்பள உயர்வு, தகுதிக்கேற்ற சம்பளம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு டாக்டர்களை உடனடியாக அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளின் முக்கியத்துவம் கருதி டாக்டர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE