ஸ்ரீநகர் : நீண்ட காலம் சிறையில் இருந்தால், வெளியில் வரும் போது அதிக ஓட்டுக்களை பெற்று, பெரிய தலைவராக முடியும் என காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ராஜ்பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், காஷ்மீர் அரசு பணியில் காலியாக உள்ள 50,000 க்கும் அதிகமான பணியிடங்கள் வரும் மாதங்களில் நிரப்பப்படும். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுவதால், காஷ்மீர் மக்கள் இதில் அதிக அளவில் பங்கேற்க பயனடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி போன்ற தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான் 30 முறை சிறைக்கு சென்றுள்ளேன். எனக்கு அதை பற்றி நன்றாக தெரியும். எத்தனை காலம் அவர்கள் காவலில் இருக்கிறார்களோ, வெளியில் வந்த பிறகு அவ்வளவு ஓட்டுக்கள் அதிகம் பெற்று அவர்கள் வெற்றி பெறலாம். அதனால் இதனை தங்களுக்கு சாதகமானதாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். யார் சிறையில் அதிக காலம் இருக்கிறார்களோ அவர்கள் பெரிய அரசியல் தலைவர்களாக வருவார்கள் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE