புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் திங்கட்கிழமை (செப்., 2) வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ்., மோசடி வழக்கில், முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து, அவரின் காவல் இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இன்று(ஆக.,30) சிதம்பரத்தை கோர்ட்டில், அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, சிபிஐ தரப்பில், மேலும் பல கேள்விகள் கேட்க வேண்டும். இதனால், சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ காவலை எதிர்த்து தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், செப்., 2 வரை விசாரணைக்கு வருகிறது. அதுவரை, சிபிஐ காவலில் இருக்க தயார். இதுவரை 400 கேள்விகளுக்கு பதிலளித்தேன். அதில், எனக்கு எதிராக எந்த ஆதாரமும், ஆவணமும் இல்லை எனக்கூறினார்.
இதனையடுத்து, சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்., 2( திங்கட்கிழமை) வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE