புதுடில்லி: 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட, தற்போதைய கொள்கை பத்தாது. புதிய கொள்கை அமல்படுத்தாவிட்டால், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்க வேண்டியது தான் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான, முதல் காலாண்டில், நாட்டின் வளர்ச்சி, 7 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5 சதவீதமாக சரிந்துள்ளது. மேலும்,நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக வலுப்படுத்தும் வகையில், வங்கித் துறையில் புதிய சீர்திருத்த நடவடிக்கைகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை, 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:புதிய பொருளாதார கொள்கையை விரைவில் அமல்படுத்தாவிட்டால், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்க தயாராக வேண்டும். பொருளாதார வீழ்ச்சியை, தைரியம் அல்லது அறிவால் மட்டும் காப்பாற்ற முடியாது. அதற்கு இரண்டும் தேவை. ஆனால், இன்று இரண்டும் இல்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Get ready to say good bye to ₹ 5 trillion if no new economic policy is forthcoming. Neither boldness alone or knowledge alone can save the economy from a crash. It needs both. Today we have neither
— Subramanian Swamy (@Swamy39) August 31, 2019
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE