புதுடில்லி: இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதம் ஆக உள்ளது. இது, பொருளாதாரம், நீண்ட காலமாக மந்தநிலையில் இருப்பதை காட்டுகிறது. இந்தியா மிகவும் வேகமாக வளரும் திறன் பெற்றது. ஆனால், மோடி அரசின் மோசமான செயல்பாடு காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி துறை வளர்ச்சி 0.6 சதவீதம். ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவை காரணமாக பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பதை காட்டுகிறது. பொருளாதார மந்தநிலை இனியும் தொடரக்கூடாது. இதனால், பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE