திருவள்ளூர் : தனியார் மரக்கரி சூளையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 10 கொத்தடிமை தொழிலாளர்களை, வருவாய் துறையினர் மீட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், குத்தம்பாக்கம் கிராமம் அருகில் உள்ள உட்கோட்டையில், சங்கர் என்பவர், மரக்கரி தயாரிக்கும் சூளை நடத்தி வருகிறார்.
இங்கு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், திருவள்ளூர் கோட்ட சப் கலெக்டர் ரத்னா, நேற்று முன்தினம் மாலை, திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது, அங்கு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, ரமணி, சிம்புராணி, ராஜா உட்பட, 10 பேர், கொத்தடிமையாக வைத்திருந்தது தெரியவந்தது.இது தொடர்பாக, விசாரணை நடத்திய சப் - கலெக்டர் தலைமையிலான வருவாய் துறையினர், அவர்கள் அனைவரையும் மீட்டு, நேற்று, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும், மரக்கரி சூளை உரிமையாளர், சங்கர் மீது, வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE