புதுடில்லி: மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில சட்டசபைகளின் பதவி காலம் நிறைவடையவிருப்பதையொட்டி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலை நடத்தி முடிப்பதற்கான பணிகள் வரும் தீபாவளிக்குள் முடித்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை நக்சல் ஆதிக்கமுள்ள பகுதிகளில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும். எனவே அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE