கடலுார்:ஊர் தலைவரை தேர்வு செய்யும் பிரச்னையில், ஒருவரை வழிமறித்து தாக்கிய, நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், தேவனாம்பட்டிணத்தில், ஊர் தலைவரை தேர்வு செய்ய கடந்த வாரம் முன்பு கூட்டம் நடந்தது. இதில், அதே பகுதியை சேர்ந்த சண்முகம், 36; என்பவர், பழைய தலைவர் சக்திவேலுவை மீண்டும் ஊர் தலைவராக தேர்வு செய்யக் கூடாது என கூறியுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் தரப்பினர் குமரவேல், கண்ணன், முரளி, அன்பு ஆகியோர் சண்முகத்திடம் தகராறு செய்தனர்.இந்நிலையில், கடந்த 17ம் தேதி, மேட்டுத் தெருவில் சென்ற சண்முகத்தை, குமரவேல் மற்றும் அவரது தரப்பினர் வழிமறித்து தாக்கினர்.இது குறித்து தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து குமரவேல், கண்ணன், முரளி, அன்பு ஆகியோரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE