திருப்பூர்:பாரதிய தபால் ஊழியர் சங்கத்தினர் (பி.பி.இ.எப்.,) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், வாரிசுளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு உடனே வழங்குதல், வாரத்திற்கு 5 நாட்கள் வேலை நாட்களாக அறிவித்தல், காலிப்பணியிடங்களை உடனே நிரப்புதல், போனஸ் உச்சவரம்பை அதிகரித்தல் உள்ளிட்ட, 18 கோரிக்கைளை வலியுறுத்தி, 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, 21ம் தேதி சென்னை சி.பி.எம்.ஜி., அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும், அதற்கும் தீர்வு கிடைக்காத பட்சத்தில், 25ம் தேதி புதுடெல்லி தபால் இயக்குனரகம் முன், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE