சென்னை: செப்.,25 ம் தேதியன்று தமிழகத்தின் 16 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்.,25 ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்.,25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மீனவர்கள் குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் தர்மபுரி மாவட்டம் பாலகோட்டில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலங்குடியில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE