புதுடில்லி:கிரிக்கெட் போட்டிகளை நடத்தும், ஐ.பி.எல்., எனப்படும், 'இந்தியன் பிரீமியர் லீக்' அமைப்பின் முன்னாள் கமிஷனரும், இந்தியாவில் இருந்து தப்பியோடியவருமான லலித் மோடி, அவருடைய மனைவி மினால் மோடியின் வங்கிக் கணக்கு விபரங்களை அளிக்கும்படி, சுவிட்சர்லாந்து அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனரான லலித் மோடி மற்றும் அவருடைய மனைவி மினால் மோடி மீது பல்வேறு மோசடி புகார்கள் கூறப்பட்டன.

அதையடுத்து, 2010ல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகருக்கு அவர் தப்பிச் சென்றார்.இந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்துடன், பொருளாதார குற்ற வழக்குகளில், தகவல்களை பரிமாறி கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சுவிஸ் வங்கிகளில், லலித் மோடி மற்றும் மினால் மோடி செய்துள்ள முதலீடுகள் குறித்த தகவல்கள் அளிக்கும்படி, மத்திய அரசு கேட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE