ராகுல் திடீர் தாய்லாந்து பயணம்

Updated : அக் 06, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (110) | |
Advertisement
புதுடில்லி: இரு மாநில தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் திடீரென பாங்காங் புறப்பட்டு சென்றுள்ளார்.மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு வரும் 21 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநில சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வரும் நேரத்தில் ராகுல் திடீரென பாங்காங்கிற்கு புறப்பட்டு சென்றுள்ளது பலரது புருவங்களை உயர்த்தி

புதுடில்லி: இரு மாநில தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் திடீரென பாங்காங் புறப்பட்டு சென்றுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு வரும் 21 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநில சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வரும் நேரத்தில் ராகுல் திடீரென பாங்காங்கிற்கு புறப்பட்டு சென்றுள்ளது பலரது புருவங்களை உயர்த்தி உள்ளது.




latest tamil news



அரியானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் தன்வார் பதவி விலகிய நிலையில் ராகுலால் வளர்க்கப்பட்டவர்கள் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார்கள் எனவும், காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான சவாலை எதிர்கொள்ள உள்ளது. என குற்றம் சாட்டி உள்ளார்.


மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் தனது ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்காவிட்டால் பிரசாரத்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார். மேலும் கட்சித்தலைமை தொண்டர்களிடம் இருந்து கருத்துக்களை பெற முயற்சிக்கவில்லை என கூறிய அவர் அசோக் தன்வாரை போன்று குற்றம் சாட்டினார்.


latest tamil news


காஷ்மீர்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது, மற்றும் நாடு முழுவதும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகிய இரு முக்கிய பிரச்னைகளை இரு மாநில தேர்தல் நேரத்தில் கையில் எடுத்து எதிர்கட்சிகள் தீவிர பிரசாரத்தை எதிர்கொள்ள உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தற்போது காங்., கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில் முக்கியமான தருணத்தில் பாங்காக் செல்ல ராகுல் எடுத்த முடிவு அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவர் அக்.,10 ம் தேதிக்குள் நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.



கடந்த 2015 ம் ஆண்டில் இதே போன்று ராகுல் 2 மாதங்கள் யாருக்கும் தெரியாமல் வெளி நாடு சென்று இருந்தை விமர்சித்த பா.ஜ., லோக்சபா அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு பதிலாக வெளி நாடுகளில் மகிழ்ச்சியாக இருப்பதாக குற்றம் சாடியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (110)

RM -  ( Posted via: Dinamalar Android App )
07-அக்-201911:16:42 IST Report Abuse
RM சுற்றுசூழல் ஒரேஇரவில் கார்பரேட்டூகளுக்காக, 2000 மரங்கள் மும்பையில் வெட்டபட்டு,பொதுமக்கள் மோடிஜியிடம் மூறையிட்டும், மெளனம்.இது நடந்தது இரு நாட்களுக்கு முன்
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
07-அக்-201909:31:56 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஒரு மனுஷன் ஜாலியாக டூர் சென்றால் பிடிக்காதே....
Rate this:
Cancel
06-அக்-201923:01:30 IST Report Abuse
Ganesan Madurai ராசவேலு, பெயிலு பப்பூ பின்னே தாய் போய் நாய் பிடிக்குறானா? அவனோட ஊழல் பணத்துல உன்னோட பங்கு எவ்வளவு? ரொம்ப முட்டு குடுத்து கூவுற? எல்லா திருட்டு திராவிட கும்பலும் புலம்பியே சாவுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X