மயிலம்: விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் பழுதுபட்ட ஜன்னல் மற்றும் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் கோட்டத்தில் இருந்து சென்னை, திருச்சி, வேலுார், புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை மற்றும் திண்டிவனம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஊழியர் பற்றாக்குறையால், பஸ்களை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான பஸ்களில் கண்ணாடி ஜன்னல் ஷட்டர்கள் உடைந்துள்ளன. இதனால், பனி மற்றும் மழைக் காலங்களில் பஸ்சில் அமர்ந்து பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.இனி, வரும் நாட்கள் பருவமழை காலம் மற்றும் பனி காலம் துவங்க உள்ள நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகள், அரசு பஸ்களை ஆய்வு செய்து, பழுதடைந்த கண்ணாடி ஷட்டர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE