மதுரை மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சாலையில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம் சார்பில் பல்கலை சான்றிதழுடன் கூடிய ஒரு மாத கால பயிற்சியாக கறவை மாடு, வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்பபு பற்றிய பயிற்சிகள் துவங்கவுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த கால்நடை விவசாயிகள், சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள இருபாலரும் கலந்து கொள்ளலாம். அக்., 25க்குள் நேரில் விண்ப்பிக்க வேண்டும், என பேராசிரியர் சிவசீலன் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு 0452---248 3903.