சென்னை, :வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு அறிவுறுத்தி உள்ளார்.தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் ராஜு, சென்னை, தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். அதிகாரிகளிடம் அமைச்சர் கூறியதாவது:மலை பகுதிகளில், மழை பாதிப்பு ஏற்படும் முன், ரேஷன் பொருட்களை சப்ளை செய்ய வேண்டும். ரேஷன் கடை கட்டடங்களில் பழுது இருந்தால், மாற்று இடங்களுக்கு, பொருட்களை மாற்ற வேண்டும்.எளிதில் அணுக முடியாத பகுதிகளில், சிறப்பு கவனம் செலுத்தி, தேவையான அளவுக்கு, உணவு பொருட்களை இருப்பு வைக்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், விடுப்பில் செல்வதை தவிர்த்து, தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE