வேலூர்: வேலூர் மற்றும் நாகை மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனையடுத்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனையடுத்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்தது.
நாகை மாவட்டம் : திட்டச்சேரி , திருமருகல் ,சீயாத்தமங்கை, திருகண்ணபுரம் , திருப்புகலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம்:வந்தவாசி, மாம்பட்டு, பாதிரி, சென்னாவரம், பிருதுார் உட்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மதுரை: மதுரை மாநகரில் ஆரப்பாளையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது
காஞ்சிபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, திம்மாவரம், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE