புதுடில்லி: ஜம்மு- காஷ்மீர் , லடாக், மிசோரம் , கோவா மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா முர்முவும், லடாக் துணை நிலை கவர்னராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மிசோரம் மாநில கவர்னராக பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை நியமிக்கப்பட்டு உள்ளார். ஒருங்கிணைந்த ஜம்முகாஷ்மீர் மாநில கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் கோவா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE