சிதம்பரம்:காவலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்து சென்ற ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிதம்பரம் காயத்திரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் முருகன், 54. ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மைதானத்தில் காவல் பணியில் இருந்தார். அப்போது மைதானத்தில் உள்ளே உட்கார்ந்திருந்த வாலிபரிடம், மைதானத்தை விட்டு வெளியில் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது, ஆத்திரம் அடைந்த வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி, முருகன் வைத்திருந்த 2000 ரூபாய், வாட்ச் ஆகியவையை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.
சிதம்பரம் போலீசா விசாரணை நடத்தினர். விசாரணையில் பணம் பறித்த வாலிபர் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ், 35, என தெரிய வந்தது. வீட்டில் பதுங்கியிருந்த ராஜேைஷ போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE