வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ : உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த இரண்டரை ஆண்டுகளில், 18 முறை அயோத்தி சென்று, தற்காலிக ராமர் கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
உத்தர பிரதேச முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவ், மாயாவதி, அகிலேஷ் யாதவ் மற்றும், காங்கிரஸ் கட்சியின் ராகுல், பிரியங்கா ஆகியோர், அயோத்தியில் ராம் லல்லா சென்று வழிபட்டதில்லை. 'சர்ச்சைக்குரிய பகுதி' என்பதால், ஒதுங்கியே இருந்தனர்.ஆனால், உபி., முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின், கடந்த இரண்டரை ஆண்டுகளில் அயோத்திக்கு, 18 முறை சென்றுள்ளார். அப்போது ராம் லல்லா தற்காலிக ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். மூன்று முறை இங்கு தீப உற்சஸவ விழாவிலும், யோகி ஆதித்யநாத் பங்கேற்றுள்ளார்.

சமீபத்தில், தீபாவளி முதல் நாளில், சரயு நதிக்கரையில், ஆறு லட்சத்துக்கும் அதிகமாக அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தி, புதிய சாதனை படைக்கப்பட்டது. சரயு நதிக்கரையில், 151 மீட்டர் உயர பிரமாண்ட ராமர் சிலை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் நகரமான அயோத்தியில் சுற்றுலா மேம்படுத்த, ராமர் குறித்த டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 'பைசாபாத்' என அழைக்கப்பட்டு வந்த மாவட்டத்தை அயோத்தி எனவும் பெயர் மாற்றி, முக்கியத்துவம் அளித்துள்ளது, யோகி ஆதித்யநாத் அரசு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE