பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும், 'டெங்கு' தடுப்பு பணிகள் குறித்து, சுகாதாரத்துறை இணை இயக்குனர், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட, பாபாபீ தர்கா பகுதியில், டெங்கு தடுப்பு பணிகள் குறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, ஒவ்வொரு வீடாக சென்று, டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்த கிருஷ்ணராஜ், காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று, வீடு திரும்பிய சிறுமியிடம் நலம் விசாரித்தார்.அப்போது அவர் கூறியதாவது:டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. பனிக்காலம் துவங்கி உள்ளதால், டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. மருந்து கடைகளில், மருத்துவர்களின் சீட்டு இல்லாமல், மருந்து கொடுக்கும் கடைகளின் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சல் அறிகுறி இருந்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE