மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் குளத்தின், வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் குளத்தினை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்திற்கு வரும் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளதால், கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக, குளத்தில் தண்ணீர் தேக்க முடிய வில்லை.நடப்பாண்டு மங்கலம்பேட்டை பகுதியில் கனமழை பெய்த நிலையிலும், தற்போது மங்களநாயகி அம்மன் கோவில் குளம் வறண்டு காணப்படுகிறது. எனவே, இக்கோவில் குளத்தின் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE