வில்லியனுார்:உத்திரவாகினிப்பேட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடம் அமைக்க அமைச்சர்கள் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர்.
வில்லியனுார் தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உத்திரவாகினிப்பேட்டில் ரூ.1:25 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் வரவேற்றார். நல அமைச்சர் கந்திசாமி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.மேலும் அதே பகுதியில் ரூ. 25 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், மற்றும் தொகுதி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE