திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் தாலுகாவில் யூரியாவிற்கு தட்டுபாடு நிலவுவதால்
விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
இந்தாண்டு
பெய்யும் மழையால் கண்மாய் பாசன நிலங்கள் மட்டுமின்றி,
மானாவாரியிலும் நெல் நடவு நடக்கிறது. மானாவாரி பகுதி கிணறுகள்,
ஆழ்குழாய்களில் நீர்மட்டம் உயர்ந்ததும், தொடர்ந்து மழை பெய்யுமா
என்ற சந்தேகத்தில் குறைந்தளவில் நெல் பயிரிட்டனர். மழை தொடர்வதால் நெல் நடவு தீவிரமாக நடக்கிறது.
நெல்
நாற்று பாவி பின்பு நட 25 நாட்கள் ஆகிவிடும். அது
சாத்தியமில்லாததால், நாற்றுக்களை விலைக்கு வாங்க முடிவு
செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு நாற்று கிடைக்கவில்லை. நெல் நடவு
செய்தவர்கள் தற்போது முதல் களையெடுத்து உரமிடும் நிலையில்
உள்ளனர். ஆனால் யூரியாவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: யூரியா திருமங்கலம், மதுரையில் மட்டுமே கிடைக்கிறது. வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. பொட்டாஷ் பயன்படுத்த வேண்டியுள்ளது. யூரியாவை காட்டிலும் இரு மடங்கு விலை அதிகம் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE