புதுச்சேரி:புதுச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா கலந்தாய்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நடந்தது.நிகழ்ச்சிக்கு, சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால் தலைமை தாங்கி, லஞ்ச ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்தும், அதனை ஒழிக்க நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும், அதற்காக செயல்படுத்த வேண்டிய உத்திகள் குறித்து விளக்கினார்.மண்டல மேலாளர் ஹரிமது முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், புதுச்சேரி, கடலுார், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிளைகளின் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வங்கி மேலாளர், சீனியர் எஸ்.பி.,யுடன் கலந்தாய்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE