திருபுவனை;கலிதீர்த்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.சோரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, பள்ளி துணை முதல்வர் மாதவன் தலைமை தாங்கினார். பொறுப்பு ஆசிரியர் நளினா வரவேற்றார். ஆயுர்வேத மருத்துவர் ஜோய் இமானுவேல், டெங்கு நோய் பரவும் முறை, நோய் வந்த பிறகு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், டெங்கு நோய் வராமல் தடுப்பது குறித்தும், மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து டெங்கு தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.ஆசிரியர் அருள்ஜோதி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE