தேனி:எள் பயிரில் வாடல் நோயை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் சென்றாயன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பெரியகுளம்
தாலுகா, ஜெயமங்கலம், எருமலைநாயக்கன்பட்டி கிராமங்களில் 60
எக்டேரில் எள் பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பூ பூக்கும்
பருவத்தில் இருந்து காய்பிடிக்கும் பருவத்தில் உள்ளது. கடந்த வாரம்
பெய்த தொடர் மழையால் வயலில் நீர் தேங்கி பயிரில் வாடல் நோய்
காணப்படுகிறது.
வாடல் நோய் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர்
வழங்கிய ஆலோசனையில், வாடல் நோய் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த
வழிமுறையில் பின்பற்றுவது அவசியம். தொழு உரம் 12.5டன் ஒரு
எக்டேருக்கு என்ற அளவில் இட வேண்டும். விதை நேர்த்தி டைகோடெர்மா
விரிடி4 கிராம் ஒருகிலோ விதைக்கு மற்றும் சூடோ மோனாஸ்10கிராம் ஒரு கிலோ
விதைக்கு சேர்க்க வேண்டும். கார்பன்டைசிம், ஒரு கிராம் மருந்தை ஒரு
லிட்டர் நீரில் கரைத்து வேரில்ஊற்ற வேண்டும்.
ஏக்கருக்கு 200 கிராம்
200 லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும்.சூடோ மோனாஸ் 2.5 கிலோவை நீரில் கரைத்துவேரில் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE