கோவை:கோவை புறநகர் பகுதியிலும், கர்நாடக மாநிலத்தின் பரவலாகவும் தக்காளி அதிக அளவு விளைச்சலை கொடுத்ததால், மார்க்கெட்டில் விலை சரிவை தொட்டது.கோவை மாவட்டத்தில் நாச்சிபாளையம், ஆலாந்துறை, செம்மேடு, தொண்டாமுத்துார் பகுதிகளில் தக்காளி அதிக விளைச்சலை கொடுத்தது.அதனால் கோவை நாச்சிபாளையம் மார்க்கெட்டில், நேற்றைய நிலவரப்படி, 25 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தக்காளி, 350லிருந்து, 400 ரூபாய்க்கு விற்றது. இதனால் சில்லரை விலையில், கிலோ ரூபாய் 15 முதல் 20 வரை விற்றது. வியாபாரிகள் கூறுகையில், 'கர்நாடக மாநிலத்தில் எதிர்பாராத விளைச்சலை கொடுத்ததால், அதிக அளவு வரத்து இருந்தது. அதனால் உள்ளூர் சரக்குக்கு விலை கிடைக்கவில்லை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE