மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கருப்புச்சாமிபுதுாரில் குவாரி குழியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரத்திலிருந்து கருப்புச்சாமிபுதுார் செல்லும் ரோட்டில், குவாரி குழிகள் ஏராளமாக உள்ளன. அங்குள்ள நீர் தேங்கிய குவாரி குழியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. மடத்துக்குளம் போலீசார், சடலத்தை மீட்டு, இறந்தவர் யார், எந்த ஊர், கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.
Advertisement