விழுப்புரம்:பாதாள சாக்கடை மேன்ேஹாலில் கழிவுநீர் வெளியேறுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் நகராட்சி, திருச்சி நெடுஞ்சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.இங்கு பாதாள சாக்கடை மேன்ேஹாலில் இருந்து கடந்த சில தினங்களாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே, மேன்ேஹாலில் கழிவுநீர் வெளியேறுவதை நிறுத்த, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE