வால்பாறை:வால்பாறை நகரில், ஆதார் கார்டு சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யு.,கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறை சி.ஐ.டி.யு.,தொழிற்சங்க பொதுசெயலாளர் பரமசிவம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், வால்பாறையில், கடந்த முறை நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆதார் அட்டையில் பெயர்மாற்றம், பிறந்த தேதி மாற்றம் செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது. வால்பாறை மலைப்பகுதியில், பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆதார் கார்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், பணப்பலன்களை பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்திடம் இருந்து பணப்பலன்களை பெறும் வகையில், வால்பாறையில், ஆதார் கார்டு சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE