திண்டிவனம்:மரக்காணம் சாணக்யா வித்யாஷ்ரம் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாறுவேடப்போட்டி நடந்தது.பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார்.பள்ளி துணை தாளாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலாவிங்க பயிற்சி அகாடமி நிர்வாக இயக்குநர் சித்தானந்தன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் பள்ளி சிறுவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், தேசத்தலைவர்கள், அதிகாரிகள், பூக்கள், செல்ல விலங்குகள் என பல்வேறு மாறு வேடத்தில் பங்கேற்றனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் பானுமதி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE