விழுப்புரம்:டிப்பர் லாரியில் அனுமதியின்றி மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பூத்தமேடு ஏரிக்கரை அருகே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவர் தளவானுார் சுரேஷ், 34; என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளர் தென்னமாதேவி சத்தியநாதனை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE