தியாகதுருகம்:கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்த போதும் தியாகதுருகத்தில் மழை பெய்யாமல் ஏமாற்றியது.
கள்ளக்குறிச்சியில் கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு கனமழை பெய்தது. சின்ன சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது.அதைத்தொடர்ந்து 8ம் தேதி இரவு சங்கராபுரம் ரிஷிவந்தியம் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த மழை பெய்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது.அடுத்த நாள் 9 ம் தேதி மாலை கள்ளக்குறிச்சியில் மீண்டும் கனமழை பெய்தது. இந்நிலையில் தியாகதுருகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பெய்த கன மழை தியாகதுருகத்தை ஏமாற்றியது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE