மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் இலவசமாக தையல் பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.மேட்டுப்பாளையம் லன்ஸ் கிளப் மற்றும் ஜி.ஆர்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி ஆகியவை இணைந்து, காயிதே மில்லத் தொடக்கப் பள்ளியில், கடந்த, 20 ஆண்டுகளாக பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.இம்மையத்தின் மூலம் ஏராளமான பெண்கள் தையல் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பயிற்சி என, ஆண்டுக்கு இரண்டு வகுப்புகள் இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் நடந்தது.விழாவுக்கு பள்ளித் தலைவர் டாக்டர் முகமது ஜக்காரியா தலைமை வகித்தார்.மேட்டுப்பாளையம் லயன்ஸ் கிளப் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினர். பயிற்சியாளர் பாத்திமா உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE