மேட்டூர்: மேட்டூர் உழவர் சந்தை, 1999ல் தொடங்கப்பட்டது. 20 ஆண்டான நிலையில், சந்தைக்கு தினமும், 9 டன் காய்கறி, ஞாயிறில், 17 டன் காய்கறியை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு, 80 கடைகள் உள்ளன. சராசரியாக தினமும், 75 முதல், 90 விவசாயிகள் வருகின்றனர். மக்கள் ஆதரவால், கடைகளின் எண்ணிக்கையை, 80ல் இருந்து, 90 ஆக உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கூடுதலாக, 10 கடைகள் கட்டுவதோடு, ஏற்கனவே உள்ள கடைகளின் மேற்கூரை, தரைத்தளத்தை சீரமைத்து, கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மேட்டூர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஆறுமுகம் கூறுகையில், ''உழவர் சந்தையை விரிவுபடுத்த, கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்து, திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கிய பின், பணி தொடங்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE