ஏற்காடு: ஏற்காடு, ஐந்தாவது கொண்டை ஊசி வளைவை ஒட்டி, வனப்பகுதியிலுள்ள மரத்தில், நேற்று, தூக்கில் தொங்கியபடி, சடலம் இருந்தது. ஏற்காடு போலீசார், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, அவர் அணிந்திருந்த பேன்ட், சட்டை, நைய்ந்து போன நிலையில் இருந்ததால், இறந்து பல நாளாகியிருக்கலாம் என, சந்தேகித்தனர். பேன்ட் பாக்கெட்டில் புகையிலை, செல்லாத நாணயங்கள், காகிதத்தில் கட்டப்பட்ட விபூதி இருந்தன. அருகில் கைத்தடி இருந்ததால், இறந்தவர் முதியோராக இருக்கலாம் என எண்ணி, சமீபத்தில் காணாமல் போனவர்களின் விபரத்தை திரட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE