ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, நான்காவது மண்டலத்தில் நடந்த, 'மாஸ் கிளீனிங்' பணியில், 70 டன் குப்பை அகற்றப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி சார்பில், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை, 'மாஸ் கிளீனிங்' பணி மேற்கொள்ளப்படுகிறது. நான்காவது மண்டலத்தில், நேற்று சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்களை கொண்டு, 46,47,48,53,60,55 முதல், 59 வரையிலான, 10 வார்டுகளில் தூய்மைப் பணி, சுகாதார ஆய்வாளர் மணிவேல் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், சாலையோரங்களில் கிடந்த மரம், செடி, கொடிகள், நீண்ட நாட்களாக அகற்றப்படாத குப்பை, காலியிடங்களில் உள்ள குப்பை அகற்றப்பட்டன. இவை சேகரிக்கப்பட்டு வெண்டிபாளையம் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் பணிகளை பார்வையிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE