கிருஷ்ணகிரி: அகவிலைப்படியை விரைந்து வழங்கிய, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, ஆசிரியர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி வட்டார கிளையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் ஹென்றி பவுல்ராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன், ரோஸ்லீன்மேரி, மரியசாந்தி, டேவீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்றார். கூட்டத்தில், அகவிலைப்படியை விரைந்து வழங்கிய, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, இடைநிலை ஆசிரியர் நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்றவர்கள் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் போது குறைகிறது. எனவே இதை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது எமிஸ் இணையதளத்தில், பதிவேற்றம் பணியால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. இதை செய்ய குறுவளமைய அளவில் ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும். கூட்டுறவு சங்க பங்கு ஈவுத்தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலந்தாய்வு நடத்தினால், புதிதாக விண்ணப்பங்கள் பெற வேண்டும். நகர கிளையை வட்டார கிளையோடு இணைக்க, மாவட்ட கிளையை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE